அடேய்!! சீனாக்காரா! இதோ வரோம்டா! புயலென எல்லைக்கு புறப்பட்ட இளம்படை!

Published by
kavitha

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறியது மட்டுமின்றி ஆக்கிரமிப்பு மற்றும் அவர்கள் தாக்கியதில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இச்சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து  இரு தரப்பிலும் நடைபெற்ற அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் எல்லையில் இரு நாடுகளும் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறது.மேலும் இந்திய சீனா மீதான கண்காணிப்பை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்திய வீரர்களின் வீரமரணம் நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி நிலையில் தான்  சீன எதிர்ப்பு மனநிலை இந்தியர்கள் இடையே  தற்போது அதிகரித்து உள்ளது. அதன் ஒரு பகுதியாக சீன தயாரிப்புகளை புறக்கணித்து வருகின்றனர்.

இவ்வாறு நாடெங்கும் எதிர்ப்பு அலை உருவாகியுள்ள நிலையில்  உத்தரபிரதேசத்தில் பத்து சிறுவர்கள் ராணுவ வீரர்களின் வீரமரணத்திற்குப் பழிவாங்குவோம் என்று கூறி எல்லைக்கு புறப்பட்டபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தற்போது இணையதளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த பத்து சிறுவர்கள் சாலையில் ஊர்வலமாக வந்தனர்.அவர்களை மாவட்ட எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.விசாரிப்பின் போது இந்திய ராணுவ வீரர்களை சுட்டு கொன்ற சீனாவுக்கு பாடம் கற்பிக்கப்போவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த இளம் படைகளை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

Published by
kavitha

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

2 minutes ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

19 minutes ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

1 hour ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

1 hour ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

3 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

4 hours ago