“கல்வான் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கால் சீன ராணுவம் திணரல் மட்டுமின்றி வெள்ளம் முகாம்களை அடித்து செல்லும் வாய்ப்பு உள்ளதால் சீன ராணுவம் அதிர்ச்சியில்; மட்டுமின்றி திரும்பி செல்வதை விட்டால் வேறு வழி? எதுமில்லை என்ற சூழ்நிலையில் சீன ராணுவம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது”.
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாடுக் கோடு பகுதியில், இந்திய பகுதியை அத்துமீறி ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. கடந்த மே மாதம் எல்லை கட்டுப்பாடுக் கோடு பகுதியில் ஒடுகின்ற கல்வான் ஆற்றிங்கரையில் சீனா தனது படைகளை குவித்தது. இதை அடுத்து இந்திய எல்லையில் அத்துமீறி நுழைவதை தடுக்க இந்தியாவும் ராணுவத்தை நிறுத்தியது.
இந்நிலையில் ஜூன்.,15ம் தேதி, சீன ராணுவம் அத்துமீறி நுழைய ஈடுபடும் போது நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில், 43 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியது.
தற்போது வரை எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. பேச்சுவார்த்தைகள் பலகட்டமாக நடைபெற்ற நிலையில் படைகளை சீனா பின் வாங்கவில்லை.மேலும் எல்லையிலே முகாம்களை அமைத்தப்படி இருந்தது.மேலும் பதற்றமான கல்வான் பகுதிகளான நான்கு இடங்களில் சீனராணுவம் மேலும் படைகளை குவித்துள்ளது. மேலும், எல்லை கட்டுப்பாடுக் கோடு பகுதியில், இந்திய பகுதியை ஒட்டி, கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறது.
கட்டுமானங்களை அத்துமீறி கட்டி வருகின்ற சீனாவிற்கு கடும் சோதனையானது இந்திய ராணுவத்தால் அல்ல இயற்கையால் ஏற்பட்டுள்ளது. தற்போது கல்வான் ஆற்றில் வெள்ளம் கரைப்புண்டு ஓடுகிறது.இந்த வெள்ளப்பெருக்கால் ஆற்றில் பனி கட்டிகள் அதிகளவில் வருகின்றன.
இந்த நதி கரையினை ஒட்டியே, சீன ராணுவம் தனது முகாம்களை கட்டமைத்துள்ளனர். கரைப்புரண்டு ஓடி வரும் வெள்ளப்பெருக்கை தாக்குப்பிடிக்க முடியாமல், சீன படையினர் திகைப்படைந்து உள்ளதாகவும்,படையினர் திரும்பி செல்ல அதாவது வாபஸ் பெற்றாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
சரி தவறு மேலே ஒருத்தான் உள்ளான் என்பது கூறுவார்களே அது சரியே என்று மக்கள் முனுமுனுக்கின்றனர்;சரியான திட்டமிடல் இன்றி ஆக்கிரமிப்பு செய்ய களமிரங்கிய அந்நாட்டு ராணுவத்திற்கே திட்டமிடல் சிக்கலாக மாறியுள்ளது இது சீனாவில் சர்ச்சையாக எழுந்துள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…