Punjab gas leak [Image Source : Twitter/@Rahulsinghrath6]
பஞ்சாபில் உள்ள தொழிற்சாலையில் எரிவாயுக் கசிவு ஏற்பட்டதில் 9 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிற்சாலை ஒன்றில் வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. கியாஸ்புரா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
லூதியானாவின் மேற்கு துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் ஸ்வாதி திவானா, இந்த சம்பவம் உண்மையில் வாயு கசிவுதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், இது ஒரு வாயு கசிவு வழக்கு. மக்களை வெளியேற்ற தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.
மேலும், இந்த சம்பவத்தில் 9 பேர் இறந்தனர் மற்றும் 11 பேர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வாயுவின் தன்மை பற்றி இன்னும் அறியப்படாததால் மக்கள் தொகை அதிகம் உள்ள இப்பகுதியை காலி செய்வதே உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை என ஸ்வாதி கூறினார்.
இதனைத்தொடர்ந்து, பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் வாயுக்கசிவு சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளதோடு, காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைகுழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பான முழுவிவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…