சரியான நிதி மற்றும் மக்கள் சார்ந்த நடவடிக்கை எடுத்திருந்தால் மட்டுமே பொருளாதார வீழ்ச்சியை தவிர்த்திருக்க முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுகலான ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள பொருளாதார அறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் இதுவரை இல்லாத அளவாக, நாட்டின் ஜி.டி.பி. 23.9 சதவீதம் சரிந்துள்ளது என தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சரியான நிதி மற்றும் மக்கள் சார்ந்த நடவடிக்கை எடுத்திருந்தால் மட்டுமே பொருளாதார வீழ்ச்சியை தவிர்த்திருக்க முடியும் என கூறினார். மேலும், எதையும் செய்யாத மத்திய அரசுக்கு இது அவமானப்பட வேண்டிய செயலாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஆனால், அதற்கு மோடி அரசு வெட்கப்படமாட்டாது எனவும், தவறுகளையும் ஒப்புக்கொள்ளவும் மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தேசமும் தற்பொழுது பொருளாதார வீழ்ச்சியால் பெரிய விலையை கொடுத்து வருகிறது என கூறிய அவர், மத்திய அரசு போலியான கதைகளை கூறி வருவதாகவும், அந்த கதைகள் அனைத்தும் மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் அறிக்கை மூலம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அவர் கூறினார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…