10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஊரடங்கு முடிந்த பின் நடத்தப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை, 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவால், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மற்றும் மக்கள் கூடும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொது தேர்வுகள் ஊரடங்கு உத்தரவால் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு முடிந்த பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு , ஏனைய பாடங்களுக்கான பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடக்கும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மேலும், போதிய கால அவகாசம் இருப்பதால் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்றும், தேர்வுகள் துவங்குவதற்கு 10 நாட்கள் முன்பாகவே தேர்வுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு : 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில், நேற்றைய தினம் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக…
சென்னை : சுப்ரமணியபுரம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த முருகன் என்ற மொக்கைச் சாமி (78)…
பெங்களூரு : 18 வருடங்களாக ஒரே அணிக்காக விளையாடி வரும் விராட் கோலியின் ஜெர்சி நம்பரும் 18, ஐபிஎல் 2025…
பெங்களூரு : ஐபிஎல்லில் முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக விராட்…
சென்னை : தவெக கொடிக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படம் நாளை வெளியாகிறது. இத்திரைப்படத்தின் சிறப்பு…