ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதும் இனப்படுகொலையும் கிட்டத்தட்ட சமம் தான் என அலகாபாத் ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரித்து கொண்டே தான் செல்கிறது. தினமும் கொரோனாவால் புதிதாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் இறப்பவர்களை விட தற்பொழுது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பணம் படைத்தவர்கள் கூட ஆக்சிஜன் இல்லாத சூழ்நிலையில் தவித்து வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோ மற்றும் மீரட்டிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்தது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. தன் அடிப்படையில் அலகாபாத் ஐகோர்ட் தற்பொழுது தாமாகவே முன்வந்து இது குறித்து விசாரணை நடத்தியுள்ளது. இதில் ஆக்சிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு வினியோகிக்க கூடிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் இனப்படுகொலைக்கு சற்றும் குறையாத குற்றம் இழைத்து உள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் லக்னோ மற்றும் மீரட் மாவட்ட கலெக்டர்கள் இதுகுறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…