[file image]
ஞானவாபி மசூதியில் ஜூலை 26ம் தேதி வரை தொல்லியல் துறை ஆய்வு நடத்த கூடாது என உச்சநீதிமன்றம் தடை.
ஞானவாபி மசூதியில் ஜூலை 26ம் தேதி வரை தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) ஆய்வு மேற்கொள்ள கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அலகாபாத் ஐகோர்ட்டை அணுக உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
மசூதி தரப்பில் அவசர வழக்காக விசாரிக்க முறையிட்ட நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த 30 பேர் கொண்ட நிபுணர் குழு வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்தனர்.
காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள ஞானவாபி மசூதி, கோயில் மீது கட்டப்பட்டுள்ளதா என்பதை அறிவியல் முறையில் ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்த அனுமதிக்க கோரி 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், ஞானவாபி மசூதியில் ஜூலை 26ம் தேதி வரை தொல்லியல் துறை ஆய்வு நடத்த கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…