[file image]
ஞானவாபி மசூதியில் ஜூலை 26ம் தேதி வரை தொல்லியல் துறை ஆய்வு நடத்த கூடாது என உச்சநீதிமன்றம் தடை.
ஞானவாபி மசூதியில் ஜூலை 26ம் தேதி வரை தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) ஆய்வு மேற்கொள்ள கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அலகாபாத் ஐகோர்ட்டை அணுக உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
மசூதி தரப்பில் அவசர வழக்காக விசாரிக்க முறையிட்ட நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த 30 பேர் கொண்ட நிபுணர் குழு வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்தனர்.
காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள ஞானவாபி மசூதி, கோயில் மீது கட்டப்பட்டுள்ளதா என்பதை அறிவியல் முறையில் ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்த அனுமதிக்க கோரி 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், ஞானவாபி மசூதியில் ஜூலை 26ம் தேதி வரை தொல்லியல் துறை ஆய்வு நடத்த கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…