மையங்கள் மட்டுமன்றி வீடு, வீடாகவும் சென்று கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.
இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன்படி, 50%-க்கும் குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்ட 40 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஜார்க்கண்ட், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநில முதல்வர்களும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி அவர்கள், மையங்கள் மட்டுமன்றி வீடு, வீடாகவும் சென்று கொரோனா தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி தொடர்பாக மக்களிடம் உள்ள குழப்பத்தை உள்ளூர் தலைவர்கள் மூலம் தீர்க்க வேண்டும் என்றும், மாவட்டங்களில் புதுமையான வழிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும் என்றும், 100 கோடி தடுப்பூசி போட்டதால் அலட்சியமாக இருந்தால் புதிய நெருக்கடி வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…