தொடர்ந்து ஐந்தாவது நாளாக குறைந்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை – மஹாராஷ்டிரா அரசு.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா கட்டுத்தீ போல் பரவி வந்ததது, இதனையடுத்து இறப்பு எண்ணிக்கையோ நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வந்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு பிரப்பிக்கப்பட்டது, இதனையடுத்து அங்கு கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது, மேலும் கடந்த சில மாதங்களாக அங்கு நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா தொற்று பதிவாகியது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மஹாராஷ்டிராவில் கொரோனா புதிய பாதிப்பு 22,122 ஆக பதிவாகியுள்ளது, மேலும் இறப்பு எண்ணிக்கை 361 ஆகவும், இதுவரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,602,019 ஆக அதிகரித்துள்ளது, இதுவரை இறப்பு எண்ணிக்கை 89,212 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது, மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42,000 பேர் குணமடைந்த நிலையில் இதுவரையிலும் 5,182,592 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,27,580 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக மஹாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. மேலும் திங்களன்று மும்பையில் மட்டும் 1,057 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு 372 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மஹாராஷ்டிரா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…