இந்தியாவில் கூகிள் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 36,934 புகார்களைப் பெற்று 95,680 பதிவுகளை கூகிள் அகற்றியது.
இந்தியாவில் கூகிள் நிறுவனம் பயனர்களிடமிருந்து கடந்த ஜூலை மாதம் 36,934 புகார்களைப் பெற்று 95,680 பதிவுகளை கூகிள் அகற்றியது. இது ஏப்ரல் மாதத்தில் 59,350 பதிவுகளையும், மே மாதத்தில் 71,132 பதிவுகளையும், ஜூன் மாதத்தில் 83,613 பதிவுகளையும் அகற்றியது. சில கோரிக்கைகள் அவதூறு போன்ற காரணங்களுக்காக உள்ளூர் சட்டங்களை மீறுவதாகக் கூறுகின்றன.
எங்கள் தளங்களில் உள்ள பதிவுகள் தொடர்பான புகார்களைப் பெறும்போது, அவற்றை கவனமாக மதிப்பீடு செய்கிறோம்” என்று கூகிள் தெரிவித்துள்ளது. பதிப்புரிமை (94,862), வர்த்தக முத்திரை (807), நீதிமன்ற உத்தரவு (4), புறக்கணிப்பு (3), போலி (1), கிராஃபிக் பாலியல் உள்ளடக்கம் (1), ஆள்மாறாட்டம் (1) மற்றும் பிற சட்டங்கள் உட்பட பல பிரிவுகளின் கீழ் பதிவுகள் நீக்கப்பட்டது.
புதிய ஐடி விதிகளின் கீழ், 5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட பெரிய டிஜிட்டல் தளங்கள் ஒவ்வொரு மாதமும் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட வேண்டும். அந்த அறிக்கையில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களைக் குறிப்பிடவேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கூகிள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…