Supreme Court of India [File Image]
டெல்லி: ஜாமீனில் வெளியே வந்தவரை கூகுள் மேப் உதவியுடன் இருப்பிடத்தை தொடர கூடாது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சட்டப்பட்டு கைதாகி இருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த ஃபிராங்க் விட்டஸுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது. ஆனால். அந்த ஜாமீன் உத்தரவு மீது பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருந்தது.
குறிப்பாக, ஜாமீனில் வெளியே வந்தவரின் இருப்பிடத்தை அதிகாரிகள் எளிதில் தெரிந்து கொள்ள கூகுள் மேப் ஆன் செய்து வைத்து இருக்க வேண்டும். மேலும், ஜமீனில் வெளியே வந்தவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட கூடாது என நைஜீரிய நாட்டு தூதரகத்திடம் இருந்து உத்தரவாதம் வாங்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த ஜாமீன் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தது.
இந்த நிபந்தனைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நைஜீரியா நபர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி அபய் எஸ் ஓகா மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. கூகுள் மேப் மூலம் ஜாமீனில் வெளியே வந்தவர்களின் இருப்பிடத்தை கண்டறியும் நிலையானது தனிநபர் சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறினர்.
மேலும், இந்த உத்தரவானது நீதிமன்றம் ஜாமீன் வழங்குவதன் நோக்கத்தை மீறும் வகையில் இருப்பதாக குறிப்பிட்டது. இதுபோல கூகுள் மேப் மூலம் யாருடைய இருப்பிடத்தையும் கண்டறிய கூடாது என்று நீதிபதிகள் கூறினர். இதனை தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேற மாட்டேன் என நைஜீரியா தூதரகத்திடம் உத்தரவாதம் பெற இருந்ததையும் தளர்த்தி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
லீட்ஸ் : சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா விலகிய நிலையில், அடுத்ததாக யார் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின்…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.…
டெல்லி : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தேசியத் தலைவருமான சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில்…
அகமதாபாத் : விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்த விமான விபத்து இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 12 அன்று,…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் ஈரானின் உச்ச…
டெல்லி : இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இரண்டு தரப்பும் மாற்றி மாற்றி தாக்குதல் நடத்தி…