“கூகுள் பே” செயலிக்கு ரிசர்வ் வங்கியில் அங்கீகாரம் தேவையில்லை- கூகுள்!

Published by
Surya

கூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் தேவை இல்லை என கூகுள் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பல கோடி மக்கள், தங்களின் அன்றாட பணப்பரிவர்த்தனை தேவைகளுக்காக கூகுள் பே செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பணம் செலுத்துவது, பணம் பெறுவது, கட்டணங்கள் செலுத்துவது, போன்ற வேலைகளை செய்யலாம்.

அவ்வாறு வரும் பணம், நேரடியாக உங்கள் வாங்கி கணக்கு செல்லும். இந்த நிலையில் கூகுள் பே செயலி, ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் இல்லாமல் கட்டண முறைமை வழங்குநராக செயல்படுவதாகவும், இது இந்தியாவின் கட்டணம் மற்றும் தீர்வு சட்டத்துக்கு எதிரானது என பொருளாதார நிபுணர் அபிஜித் மிஸ்ரா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இருதரப்பு வாதங்களும் நடந்தது. மேலும், கூகுள் இந்த வழக்கு தொடர்பான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில் கூகுள் நிறுவனம், கூகுள் பே செயலி, கட்டண முறைமை ஆபரேட்டர் இல்லை எனவும், மூன்றாம் நபர் பயன்பாடு செயலி (Third party app) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, கூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் தேவை இல்லை எனவும், கூகுள் பே போன்ற மூன்றாம் நபர் பயன்பாட்டு செயலிகளின் சேவை நெட்வொர்க்கில் பரிவர்த்தனைகளை நடத்துவதற்கு, முழு ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (UPI) நெட்வொர்க், அங்கீகாரம் அளித்துள்ளதாக அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்தது.

இதற்கு பதிலளிக்க, மனுதார் அபிஜித் மிஸ்ராக்கு நீதிபதிகள் காலஅவகாசம் அளித்தனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்டு 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Published by
Surya

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

8 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

8 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

10 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

11 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

11 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

11 hours ago