Bus Accident [FILE IMAGE]
ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் மாநிலப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மீது டெம்போ ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. மஹ்வா-ஹிந்தவுன் சாலையின் அருகே திக்ரி திருப்பத்திற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை 21 -ல் நடந்த இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
அரசு பேருந்து மஹ்வாவில் இருந்து ஹிந்தவுன் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஹிண்டான் பக்கத்தில் இருந்து டெம்போ வந்து கொண்டிருந்தது. மஹ்வா-ஹிந்தவுன் சாலை அருகே திக்ரி திருப்பம் அருகே வேகமாக வந்த பேருந்து டெம்போ மீது மோதியது. மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதியுள்ளது.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயமடைந்த அனைவரையும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவத்தை அடுத்து பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், போலீஸார் பேருந்தை பறிமுதல் செய்து ஓட்டுநரை தேடி வருவதாகவும், ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மஹ்வா வட்ட அதிகாரி பிரேம் பகதூர் கூறியுள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…