மக்களுக்கு வலி, இழப்பு என வரும் பொழுது இந்திய அரசு தூங்குகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு குறித்த தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் இது தொடர்பாக பேசிய ராகுல் காந்தி, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சரியான புள்ளி விபரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் எனவும், அவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டாம் அலையின் பொழுது கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு முறையாக இறப்பு சான்றிதழ் கூட வழங்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய அரசு மக்களுக்கு வலி மற்றும் இழப்பு என வரும்பொழுது தூங்குகிறது, வாருங்கள் எழுப்புவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…