மத்திய பிரதேசத்தில், தலைநகர் போபாலை தவிர, பிற பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களை மூடுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், மத்திய பிரதேசத்தில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் பள்ளிகள் உட்பட, பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் 225-க்கும் மேற்பட்ட மையங்கள் திறக்கப்பட்டது.
தற்போது மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறைந்து, கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இந்த சிகிச்சை மையங்களில் அதிக நோயாளிகள் இல்லை. எனவே தலைநகர் போபாலை தவிர, பிற பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களை மூடுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த சிகிச்சை மையங்கள் மூடப்பட்டு வருகின்றன.
ஆனால் முன்னாள் முதல் மந்திரியும் மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் , இந்த நடவடிக்கையை குறை கூறியுள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டசபை கூட்டத் தொடரை ரத்து செய்திருக்கும் நிலையில், இந்த சிகிச்சை மையங்களை மூடுவது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தனது முடிவை நியாயப்படுத்தி உள்ள நிலையில், தேவைப்பட்டால் அரசிடம் அனுமதி பெற்று மீண்டும் அந்த மையங்களை திறக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…