பேரன் திருமணத்துக்காக பலகாட்டிலிருந்து பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் பயணித்த தாத்தா பாட்டி!

Published by
Rebekal

பேரனின் திருமணத்திற்காக  பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் பாலக்காட்டில் இருந்து வந்த தாத்தா பாட்டியின் அசத்தலான செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.

தொலைதூர பயணம் என்றாலே கார்கள் அல்லது பேருந்துகளில் பயணிப்பது வழக்கம். ஆனால் தற்பொழுது கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவை சேர்ந்த வயதான கே என் லட்சுமி நாராயணன் மற்றும் சரஸ்வதி ஆகிய வயதான தம்பதியினர் தனது பேரனின் திருமணத்திற்கு பாலக்காட்டில் இருந்து பெங்களூர் வருவதற்கு பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள எண்ணி ஹெலிகாப்டரில் ஆகாயமார்க்கமாக பறந்து வந்துள்ளனர். கேரளாவின் பாலக்காடு பகுதியை சேர்ந்த 90 வயதான லட்சுமிநாராயணன் பேரனின் திருமணத்தில் பங்கேற்பதற்காக 85 வயதான தனது மனைவியுடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளார்.

அவர்களின் மகனும் தனது அப்பா அம்மாவுக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அவர்களது பயணத்தை இனிமையாக்கியுள்ளார். நாங்கள் எங்கள் பேரன் டாக்டர் சந்தோஷம் திருமணத்தில் கலந்து கொள்ள விரும்பினோம், சாலையில் பயணம் செய்வது மிகவும் சிரமம் என்பதால் மகன் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளான். எங்களுக்கு இந்த வயதில் கூட ஹெலிகாப்டரில் பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்திருப்பது நினைத்து அதிர்ஷ்டமாக கருதுகிறேன், இதுதான் எங்களது முதல் வான் வழி பயணம் கூட என அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். பேரன் திருமணத்தை முடித்துவிட்டு நாளை மீண்டும் இவர்கள் ஹெலிகாப்டரில் ஊர் திரும்ப உள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…

20 minutes ago

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

1 hour ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

2 hours ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

2 hours ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago