அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் காணொலி மூலம் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 11-ஆம் வகுப்பு முதல் எந்த உயர்கல்வியையும், அரசின் உதவித் தொகையுடன் பட்டியலின மாணவர்கள் பயில முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், டிடிஎச் நிறுவனங்களுக்கான புதிய வழிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டிடிஎச் உரிமம் இனி 20 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். காலாண்டுக்கு ஒருமுறை லைசென்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். இதனிடையே, எஸ்.சி. மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகையாக ரூ.59 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…