நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாயாக 86ஆயிரத்து 449 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் சரக்கு சேவை வரி விதிப்பு முறையை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்தாண்டு கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் விடுத்துள்ளதை அடுத்து அரசு பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. அனைத்து மத்திய, மாநில அரசுகளும் வருவாய் இல்லாமல் நிதி நெருக்கடியால் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாயாக 86ஆயிரத்து 449 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாகவும், கடந்தாண்டை விட இந்தாண்டு 12 சதவீதம் வசூல் குறைந்துள்ளதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வருவாயாக 98 ஆயிரத்து 202கோடி ரூபாய் வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய அரசுக்கு 15 ஆயிரத்து 906 கோடி ரூபாய் ஜிஎஸ்டியும், மாநில அரசுக்கு 21 ஆயிரத்து 64 கோடி ரூபாய் ஜிஎஸ்டியும் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 42 ஆயிரத்து 264 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாகவும், 7215 கோடி ரூபாய் கூடுதல் வரியாகவும் வசூல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…