நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாயாக 86ஆயிரத்து 449 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் சரக்கு சேவை வரி விதிப்பு முறையை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்தாண்டு கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் விடுத்துள்ளதை அடுத்து அரசு பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. அனைத்து மத்திய, மாநில அரசுகளும் வருவாய் இல்லாமல் நிதி நெருக்கடியால் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாயாக 86ஆயிரத்து 449 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாகவும், கடந்தாண்டை விட இந்தாண்டு 12 சதவீதம் வசூல் குறைந்துள்ளதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வருவாயாக 98 ஆயிரத்து 202கோடி ரூபாய் வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய அரசுக்கு 15 ஆயிரத்து 906 கோடி ரூபாய் ஜிஎஸ்டியும், மாநில அரசுக்கு 21 ஆயிரத்து 64 கோடி ரூபாய் ஜிஎஸ்டியும் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 42 ஆயிரத்து 264 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாகவும், 7215 கோடி ரூபாய் கூடுதல் வரியாகவும் வசூல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…