கடந்த வாரம் ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஒரு நபர் ஜிந்த் மாவட்டத்தில் போலீசாரால் கொல்லப்பட்டார் என்று ஹரியானா போலீசார் திங்களன்று தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட காவலர்களில் ஒருவரான கான்ஸ்டபிள் ரவீந்தர் சிங் இவருக்கு வயது 23. இவர் இறப்பதற்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாகனத்தின் எண்ணை தனது கையில் எழுதியுள்ளார் என்று ஹரியானா காவல்துறைத் மனோஜ் யாதவா இறந்த போன போலீசாரை பாராட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், எங்கள் துணிச்சலான கான்ஸ்டபிள் ரவீந்தர் சிங் தனது உயிரை இழப்பதற்கு முன் காட்டிய செயல் போலிஸ் திறன் ஆகும். பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்ட வாகன எண்ணை அவர் கையில் எழுதியுள்ளார் என்று யாதவா கூறினார். டாக்டர் ஹனிஃப் குரேஷியும் கான்ஸ்டபிளை ஒரு ‘துணிச்சலானவர்’ என்று புகழ்ந்துள்ளார்.
இறந்து போன ரவீந்தர் சிங் மற்றும் சிறப்பு காவல்துறை அதிகாரி கப்டன் சிங் ஆகியோரின் கொலை வழக்கைத் முடிப்பதற்கு குற்றம் சாட்டப்பட்டவரின் பதிவு எண் ஒரு முக்கியமான ஆதாரம் என காவல்துறைத் தரிவித்தது.
இந்த சம்பவத்தின் விசாரணையில் ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும் புட்டானா காவல் நிலையம் அருகே சோனிபட்-ஜிந்த் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் குற்றவாளிகள் இருந்ததாகவும் காவலர்கள் அவர்களை எச்சரித்த போது அது வாக்குவாதத்திற்கு வழிவகுத்து பின் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி போலீசாரிடம் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…