கடந்த வாரம் ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஒரு நபர் ஜிந்த் மாவட்டத்தில் போலீசாரால் கொல்லப்பட்டார் என்று ஹரியானா போலீசார் திங்களன்று தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட காவலர்களில் ஒருவரான கான்ஸ்டபிள் ரவீந்தர் சிங் இவருக்கு வயது 23. இவர் இறப்பதற்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாகனத்தின் எண்ணை தனது கையில் எழுதியுள்ளார் என்று ஹரியானா காவல்துறைத் மனோஜ் யாதவா இறந்த போன போலீசாரை பாராட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், எங்கள் துணிச்சலான கான்ஸ்டபிள் ரவீந்தர் சிங் தனது உயிரை இழப்பதற்கு முன் காட்டிய செயல் போலிஸ் திறன் ஆகும். பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்ட வாகன எண்ணை அவர் கையில் எழுதியுள்ளார் என்று யாதவா கூறினார். டாக்டர் ஹனிஃப் குரேஷியும் கான்ஸ்டபிளை ஒரு ‘துணிச்சலானவர்’ என்று புகழ்ந்துள்ளார்.
இறந்து போன ரவீந்தர் சிங் மற்றும் சிறப்பு காவல்துறை அதிகாரி கப்டன் சிங் ஆகியோரின் கொலை வழக்கைத் முடிப்பதற்கு குற்றம் சாட்டப்பட்டவரின் பதிவு எண் ஒரு முக்கியமான ஆதாரம் என காவல்துறைத் தரிவித்தது.
இந்த சம்பவத்தின் விசாரணையில் ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும் புட்டானா காவல் நிலையம் அருகே சோனிபட்-ஜிந்த் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் குற்றவாளிகள் இருந்ததாகவும் காவலர்கள் அவர்களை எச்சரித்த போது அது வாக்குவாதத்திற்கு வழிவகுத்து பின் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி போலீசாரிடம் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…