குஜராத்தின் ராஜ்கோட்டில் ஒரு தொழிலதிபர் லடாக்கில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சீன காருக்கான ஆர்டரை ரத்து செய்துள்ளார் .
குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் மயூர்த்வாஜ்சிங் ஜலா எம்.ஜி.ஜெய் கணேஷ் ஆட்டோகார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ .51,000 செலுத்தி 2019 ஜூலையில் எம்.ஜி. ஹெக்டர் காரை முன்பதிவு செய்திருந்தார். இந்த காரானது சீன ஷாங்காய் ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷனின் (எஸ்.ஏ.ஐ.சி) துணை நிறுவனமான எம்.ஜி. ஹெக்டர் இந்தியாவின் தயாரிப்பாகும்.
இந்நிலையில் லடாக்கில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காருக்கான ஆர்டரை ரத்து செய்துள்ளார் .
இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் எம்.ஜி. ஹெக்டர் “சீன அரசு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன்” தொடர்பு கொண்ட ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கார் என்பதால் நான்அதை வாங்க விரும்பவில்லை.எஸ்.ஐ.ஐ.சி ஒரு சீன அரசுக்கு சொந்தமான நிறுவனம், எனவே நான் எந்த வியாபாரத்தையும் செய்ய விரும்பவில்லை அல்லது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு பொருளையும் பயன்படுத்த விரும்பவில்லை என்று அந்த கார் விற்பனையாளருக்கு கடிதம் எழுதியுள்ளார் .
இது குறித்து விளக்கமளித்துள்ள அந்நிறுவனம் ஆர்டர் ரத்து செய்யப்பட்டதாகவும், பணம் திருப்பித் தரப்பட்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…