Categories: இந்தியா

மணிப்பூரில் துப்பாக்கி சண்டை – 4 பேர் உயிரிழப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் இரு சமூகத்தினர் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் 4 பேர் உயிரிழந்தனர்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட எழுந்த பிரச்சனை வன்முறையாக உருவெடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்தது. பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விடுத்து பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலைமையை சரிசெய்ய மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையே, கலவரம் மேலும் பரவாமல் தடுக்க இணைய சேவை முடக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும், மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த சமயத்தில், மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூரில் இரு சமூகத்தினர் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சண்டையில் காவல் அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சண்டையை அடுத்து  பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்தினர்.

இந்த துப்பாக்கி சண்டையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 127-ஆக உயர்ந்துள்ளது என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

19 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

38 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

1 hour ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago