KeralaHighCourt [Representative Image]
பெண்களின் அரை நிர்வாண உடலை ஆபாசமானதாக கருதக்கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
கேரளா ஆர்வலர் ரெஹானா பாத்திமா, தனது குழந்தைகள் தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்த சர்ச்சைக்குரிய வீடியோ தொடர்பான வழக்கை, கேரள உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஜூன் 2020ம் ஆண்டு ரெஹானா பாத்திமா என்ற பெண்ணின் அரைநிர்வாண உடலில் அவரது குழந்தைகள் ஓவியம் வரைந்துள்ளனர்.
இதுகுறித்து, வெளியான வீடியோ சர்ச்சைக்குள்ளாகிய நிலையில், பாத்திமாவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனையடுத்து பாத்திமாவுக்கு சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் அனைத்து வாதங்களையும் கேட்ட கேரள உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிமன்றம் , “ஒரு பெண்ணின் நிர்வாண மேல் உடலை பாலியல் அல்லது ஆபாசமானதாக கருதக்கூடாது” என்று கூறியுள்ளது. மேலும், “ஆண்கள் அரை நிர்வாணமாக இருப்பது சிலசமயங்களில் மட்டுமே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஆனால், பெண்கள் அரை நிர்வாணமாக இருப்பதை மட்டும் நாம் பெரிது படுத்துகிறோம்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…