ஆந்திராவில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் தனது பென்சிலை ஒருவன் திருடிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த ஹனுமந்த் எனும் சிறுவன் ஒருவன் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவன் நேற்று அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சில மாணவர்களுடன் சென்று அதில் ஒரு மாணவன் தனது பென்சிலை திருடி விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த போலீசார், இருவரும் கைகுலுக்கி சமாதானம் செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
ஆனால் போலீசில் புகார் அளிக்க சென்றிருந்த சிறுவன் ஹனுமந்த் என்னுடைய பென்சிலை அவன் திருடி உள்ளான், எனவே அவன் மீது நீங்கள் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பிடிவாதமாக போலீசாரிடம் கூறியுள்ளார். அதற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தால் நீதிமன்றம், ஜாமீன் என பென்சில் திருடிய மாணவனின் பெற்றோர் அலைய வேண்டியிருக்கும் என கூறியுள்ளனர்.
இதனை அடுத்து ஹனுமந்த் சரி நான் அவன் பெற்றோரிடம் இது பற்றி பேசிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளான். சிறுவனின் இந்த செயலை கண்டு மெய்சிலிர்த்த போலீசார் அவனை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒன்றாம் வகுப்பு படிக்க கூடிய சிறுவனின் இந்த புத்தி கூர்மை பலரையும் வியக்க வைத்துள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…