சென்னை : தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் (SI), தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்த 1,299 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் SI தேர்வை ஒத்திவைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, மதிப்பெண் அடிப்படையில் […]
பெங்களூரு : 18 ஆண்டு தவத்திற்கு பின், ஐபிஎல் தொடரில், ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது. இதனால், தங்கள் அணி கோப்பை வென்றதை கொண்டாடி தீர்க்க, லட்சக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்தை முற்றுகையிட்டனர். எங்கும் பார்த்தாலும் சிவப்பு ஜெர்ஸியும், ஆர்சிபி வாழ்த்து கோஷங்களும் முழங்குகின்றன. இந்நிலையில் தான் இந்த வெற்றிக்கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், சின்னசாமி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் கொண்டாட்ட விழா பாதியில் நிறுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆர்சிபி […]
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. விளக்கேத்தி உச்சிமேடு மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (75) மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகியோர், தங்கள் தோட்டத்து வீட்டில் கொலை செய்யப்பட்டனர். கொலை செய்தவர்கள் நகை மற்றும் பணத்திற்காக முதிய தம்பதியினர் கொடூரமாகக் கொலை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக விசாரணை செய்து […]
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த 50 அடி ஆழமான கிணற்றில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்தியது. விபத்து நடந்த இடம் சாலையோரத்தில் இருந்த ஆழமான கிணறு என்பதால், மீட்புப் பணிகள் சவாலானதாக இருந்தன. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் […]
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 இன்ஸ்பெக்டர்கள் மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டத்திற்கு வெளியேயும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) வருண்குமார் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் முன்னதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு காவல்துறையின் வழக்கமான நடைமுறையின்படி, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அதிகாரிகளை […]
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர் கேக்கை எடுத்துச் சென்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது, பத்திரிக்கையாளர்கள் அவரிடம், கேக் எதற்கு, யாருக்கு? கொண்டாட்டமா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் எதற்காக கேக்கை உள்ளே எடுத்துச் சென்றார் என்பது குறித்து எதுவும் கூறவில்லை. முன்னதாக, தூதரகத்திற்கு கொடுக்கப்பட்டு இருந்த பாதுகாப்பை இந்திய அரசு வாபஸ் பெற்றது. இதனிடையே, இன்று […]
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டார். நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது என்பிடிஎஸ் பிரிவு 27,29ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டு, பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக கொச்சி நகர வடக்கு காவல்துறை அதிகாரிகளால் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மெடிக்கல் […]
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில், எர்ணாகுளத்தில் உள்ள விடுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசார் ரெய்டுக்குச் சென்ற போது, அங்கிருந்து அவர் தப்பி ஓடினார். போதைப் பொருள் குறித்த சோதனையின் போது தப்பி ஓடிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து காவல்துறை சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இன்று விசாரித்த நிலையில், குற்றம் […]
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த வீடியோவில் குற்றவாளியாக கருதப்படும் அந்த நபர் தனது துணியை போலீசார் கிழுத்துவிட்டதால் புது துணியும் கேட்கிறார். வீடியோவில் பேசிய அவர் ” என்னுடைய டிரஸை கிழுத்துவிட்டிர்கள். எனக்கு புது துணி வாங்கிக்கொண்டு வாருங்கள். உங்களுடைய டிசர்ட் எனக்கு பத்தாது தான் எனக்கு அதனால் புது துணி வேண்டும். […]
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் 27ம் தேதி அன்று, பணி முடிந்து முத்தையன்பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றிருந்தார். அங்கு, கஞ்சா விற்பனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்திருந்த பொன்வண்ணன் மற்றும் அவரது நண்பர்களுக்கு, காவலர் முத்துக்குமார் அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் […]
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த ஸ்டீஃபன் மீது ஏற்கனவே 25-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில், அண்ணாமலை நகரில் சமீபத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரைப் பிடிக்க போலீசார் முயற்சி செய்துள்ளனர். […]
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தர்மபுரியில் நேற்று பேசிய சீமான் நேரில் ஆஜராகவில்லை என்றால் என்ன செய்ய முடியும் என வினா எழுப்பியிருந்தார். ஆனால், தற்போது அவர் நேரில் ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டு முன்பு ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததால் சீமான் வீட்டு காவலாளிக்கும், […]
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய தினம், சம்மனை கிழித்த காவலாளி, உதவியாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது, சீமானின் மனைவி கயல்விழி செய்தியாளர் சந்தித்து பேசியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “போலீஸ் ஈகோ அடிப்படையில் செயல்பட்டு வருவது தெரிகிறது. எத்தனையோ வழக்கு அவர் மேல இருக்கு, அவரை அசிங்கப்படுத்தத்தானே பாலியல் குற்றம்னு போடுறீங்க. காவல் ஆய்வாளர் பிரவீனுக்கு எதிராக மனித […]
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர் ஆகிய இருவரையும் மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சோழிங்கநல்லூர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தொடர்பான நேரில் ஆஜராக சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியுள்ளனர். இதை வீட்டில் இருந்த காவலாளி உள்ளிட்ட இருவர் கிழித்தெறிந்தனர். இதை விசாரிக்க சென்ற போலீசாரையும் அவர்கள் தாக்க முற்பட்டதால், […]
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர். அதன் பிறகு சம்மன் கிழிக்கப்பட்டது, அது குறித்து விசாரிக்க போலீஸ் வந்தபோது, சீமான் வீட்டு பாதுகாவலருடன் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது காவலாளி அமல்ராஜை கைது செய்த போலீசார், கைத் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றதாக கொலை முயற்சி வழக்கை பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய சீமான், “இவ்வளவு மிரட்ட வேண்டிய அவசியம் என்ன? நான் விசாரணைக்கு […]
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தனர். ஏற்கனவே அளிக்கப்பட்ட சம்மனில் சீமான் ஆஜராகாததால் இன்று, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. அந்த சம்மனை யாரோ ஒருவர் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சம்மனை கிழித்தது தொடர்பாக போலீசார் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் விசாரிக்க சென்ற போது அங்குள்ள […]
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சீமானுக்கு அனுப்பட்ட சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சீமான் இன்று விசாரணைக்காக ஆஜராகவில்லை, இதையடுத்து நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் வழக்கில், சீமான் நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் சம்மன் […]
கோவை : 1998-ஆம் ஆண்டு, கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக, 27-ம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, பாஜக இளைஞரணி தேசியத்தலைவர் தேஜஸ்வி சூர்யா, பாஜக மகளிரணி தேசியத்தலைவிவானதி சீனிவாசன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மேடையில் பேசிய அண்ணாமலை, 2026இல் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும். பாஜக ஒரு விஷயத்தை கையில் எடுத்தால் அரை நூற்றாண்டு ஆனாலும் செய்து முடிக்கும். தமிழகத்தில் […]
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியது. பரந்தூரில் விமான நிலையம் அமையக் கூடாது என்று போராடி வரும் மக்களை சந்திக்க அவர் செல்ல திட்டமிட்டிருந்தார். பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு அங்கிருக்கும் கிராமத்தினர் தொடர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அந்த போராட்டக்குழுவை சந்தித்து பேசவும், பாதுகாப்பு வழங்க கோரியும், […]
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, சினிமா பாணியில் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தகவலின்படி, பீதர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் போட ஊழியர்கள் வந்திருந்தனர். அப்போது […]