Tag: #Police

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு? த.வெ.க பொருளாளர் சொல்வேதென்ன?

காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியது. பரந்தூரில் விமான நிலையம் அமையக் கூடாது என்று போராடி வரும் மக்களை சந்திக்க அவர் செல்ல திட்டமிட்டிருந்தார். பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு அங்கிருக்கும் கிராமத்தினர் தொடர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அந்த போராட்டக்குழுவை சந்தித்து பேசவும், பாதுகாப்பு வழங்க கோரியும், […]

#Police 4 Min Read
Vijay -Parandur -Airport

கர்நாடகாவில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, சினிமா பாணியில் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஒரு தகவலின்படி, பீதர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் போட ஊழியர்கள் வந்திருந்தனர். அப்போது […]

#Karnataka 3 Min Read
bank robbry

பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது.!

சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு தலைமறைவான அவரை போலீஸ் பல்வேறு வழக்குகளில் தேடி வந்தது. ஏற்கனவே, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க பாம் சரவணன் திட்டமிடலாம் என உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஆந்திர-தமிழக எல்லையில் தலைமறையாக இருந்த பாம் சரவணனை நேற்று கைது செய்து சென்னைக்கு அழைத்து வரும் போது போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது, […]

#Chennai 3 Min Read
Pam Saravanan

பொங்கல் சிறப்பு பரிசு: 3186 காவலர்களுக்கு பதக்கங்கள் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண்/பெண்) காவலர் நிலை-2, காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு “தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்” வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் […]

#MKStalin 6 Min Read
tn police

டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு: மதுரையில் கட்டுக்கடங்கா கூட்டம்.. விவசாயிகள் நடத்திய பேரணி நிறைவு!

மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி, நரசிங்கம்பட்டியிலிருந்து மதுரை தபால் நிலையம் வரையில் முல்லை பெரியார் ஒருபோக பாசன விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், வணிகர்கள் சங்கம் மற்றும் 40 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சார்பில் பேரணி எழுச்சியோடு நடைபெற்றது. மேலும், மேலூரில் இருந்து தமுக்கம் அருகே அமைந்துள்ள மத்திய அரசின் தலைமை தமிழ் தபால் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இதனால் தல்லாகுளம் வழியாக தமுக்கம், கோரிப்பாளையம் செல்லும் சாலையில் சாலை முழுவதும் வாகனம் […]

#Madurai 4 Min Read
Farmers

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு… சென்னை காவல்துறை அதிரடி உத்தரவு.!

சென்னை: 2024ம் ஆண்டு நாளையுடன் முடிவடைந்து 2025ம் ஆண்டு பிறக்க தயாராக உள்ளது. அதன்படி, ஆங்கில புத்தாண்டு நாளை நாளிரவு கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிலையில், பொது இடங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும், முன் அனுமதி பெறாமல் ஒலிபெருக்கி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் விரிவான அறிவிப்பை வெளிட்டுள்ளார். அதன்படி, புத்தாண்டை முன்னிட்டு, நாளை இரவு […]

#Chennai 4 Min Read
New Year 2025

நெல்லை நீதிமன்றம் முன்பு இளைஞர் வெட்டிக்கொலை! 6 பேர் கைது!

நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு மாயாண்டி என்பவரை 7 பேர் கொண்ட ஒரு கும்பல் வெட்டி கொடூரமாக கொலை செய்தது. வழக்கு விசாரணைக்கு வந்த மாயாண்டியை நீதிமன்ற வளாகம் முன்பு  அந்த கும்பல் வெட்டி கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்டம் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டியை வெட்டிக் கொலை […]

#Murder 3 Min Read
arrest

நெல்லையில் பயங்கரம்: நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை!

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் பட்டப் பகலில் நடந்த இந்த கொடூரம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மாயாண்டி என்ற அந்த இளைஞரை வெட்டி கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் காரில் தப்பி சென்றனர். பின்னர், காவல் துறையினர் அவர்களை […]

#Murder 2 Min Read
Court - Nellai

சென்னையில் தப்பியோட முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்!!

சென்னை: சென்னை பெரம்பூரில் ரவுடி அறிவழகனை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடியை சேர்ந்த ஏ பிரிவு ரவுடியான அறிவழகனை பிடிப்பதற்காக பனந்தோப்பு சென்ற போலீசாரை, அவர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், தற்காப்புக்காக அவரை காலில் சுட்டு காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் டித்துள்ளார். இன்று அதிகாலையில் பொது இடத்தில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

#Arrest 2 Min Read
police- chennai

கஞ்சா விவகாரம்: மகனை தூக்கிய போலீசார்.. நேரில் சென்ற மன்சூர் அலிகான்.!

சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்-ஐ போலீசார் பல மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் கஞ்சா மற்றும் மெத் விற்பனை செய்ததாக சென்னையில் 10 பேர் கைதானார்கள். அவர்களுடன் அலிகான் துக்ளக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறி விசாரணை நடத்திவந்த போலீசார், இன்று காலை அவரை கைது செய்தனர். சில தினங்களுக்கு முன், கைதான கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே, […]

#Chennai 4 Min Read
Masoor Alikhan Son

நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு… போலீசில் பரபரப்பு புகார்! திருடனுக்கு வலைவீச்சு!

சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை சவரன் தங்க ஜிமிக்கி திருடப்பட்டிருப்பதாக அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, அந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மற்ற நகைகள் திருடு போகாமல் ஜிமிக்கி மட்டும் தொலைந்திருப்பதால் தெரிந்தவர்கள் எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. இரண்டரை பவுன் ஜிமிக்கி திருட்டு நகை திருட்டு குறித்து போலீசாரிடம் நடிகை […]

#Police 3 Min Read

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு பேசும் சமூகத்தினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கஸ்தூரி சங்கரை ஹைதராபாத்தில் போலீஸார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி, ஹைதராபாத்தில் படத் தயாரிப்பாளர் வீட்டில் மறைந்திருந்தாக தகவல் கிடைத்தது. இந்த தகவல் தனிப்படை  போலீசாருக்கு […]

#Arrest 4 Min Read
Kasthuri Shankar - Police Arrest

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 2,153 காவலர்கள் பணியிடமாற்றம் – டிஜிபி உத்தரவு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு பணியிட மாறுதல் வழங்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாறுதல் கோரி மனு அளித்திருந்தனர். அந்த மனுவின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு அளித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், ” இரண்டாயிரத்து ஐம்பத்து மூன்று (2153) காவலர்கள், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மாற்றப்பட்டு, அவர்களின் கோரிக்கையின் பேரில் ஒவ்வொருவருக்கும் […]

#DGP 5 Min Read
tn police

சினிமா பிரபலங்களுக்கு சப்ளை? போதைப்பொருளுடன் வசமாக சிக்கிய சுந்தரி சீரியல் நடிகை!

சென்னை : ராயப்பேட்டை அருகே மெத்தபெட்டமைன் என்கிற போதைப்பொருளுடன் சீரியல் நடிகை எஸ்தர் என்பவரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர். உடனே, எஸ்தரை போலீசார் மருத்துவனை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். தற்பொழுது, கைதான நடிகை எஸ்தர், சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் நடிகை மீனா என்பது தெரிய வந்துள்ளது. இவர் ராயப்பேட்டை அருகே, போதைப் பொருளை விற்க வந்தபோது கையும் களவுமாக சிக்கி கொண்டார். போலீசார் கைது செய்தபோது, அவரிடம் 5 […]

#Chennai 3 Min Read
serial actress esther

கை அசைத்து நிறுத்த சொன்ன காவலர்…காரை வைத்து இழுத்து சென்ற நபர்!

ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது. அது என்ன சம்பவம் என்றால், அந்த பகுதியில் ட்ராபிக் காவல்துறையினர் எந்தெந்த வாகனங்களில் கருப்பு நிற ஸ்டிக்கர்ஸ் ஒட்டி இருக்கிறது என்பதைச் சோதனை செய்துகொண்டிருந்தார்கள். அப்போது, சையத் மஜூத்தீன் நசீர் என்ற நபர் ஓட்டிய ஒரு கார் அந்த பகுதிக்கு வந்துள்ளது. அதனைப் பார்த்த காவல் அதிகாரி ஒருவர் காரை நிறுத்து சோதனை செய்யவேண்டும் என்பது […]

#Hyderabad 6 Min Read
Panjagutta car

திருத்தணி முருகன் கோயிலில் 100 அடி நீள தவெக கொடி.. நிர்வாகிகள் மீது பாய்ந்தது வழக்கு.?

திருவள்ளூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. ஒரு பக்கம், மாநாடுக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முதல் மாநாடு வெற்றி பெற கொடியை வைத்து பூஜை செய்வதற்காக  திருத்தணி முருகன் மலைக் கோயிலில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் 100 அடி நீளம் கொண்ட கட்சிக் கொடி ஏந்தி மாடவீதியில் விதிகள் மீறி ஊர்வலம் நடத்தினர். இதனை […]

#Police 4 Min Read
TVK Maanaadu

நிற்காமல் சென்ற லாரி.. விறுவிறு சேஸிங்.. இறுதியில் என்கவுன்டர்! லாரி உரிமையாளர் கூறுவது என்ன?

நாமக்கல் : கேரளாவில் ATM-களில் கொள்ளையடித்த கொள்ளைக்கும்பல் தப்பி வந்த கண்டெய்னர் லாரி நாமக்கல் – பச்சாபாளையம் அருகே பிடிபட்டது. பச்சாபாளையம் அருகே லாரி பிடிக்கப்பட்டு கண்டெய்னரை திறக்கும் போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த கொள்ளையர்கள் தாக்க, போலீசார் பதிலுக்கு துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். அதில்,  ஒரு கொள்ளையன் உயிரிழந்தனர். பின்னர், ஓட்டுநர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர், அந்த லாரியின் கண்டெய்னர் பெட்டியை திறந்து பார்க்கையில், அதனுள்ளே ஒரு சொகுசு கார் இருந்ததும், அதிலும் கொள்ளையர்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது. […]

#Kerala 6 Min Read
Container Lorry

வெயிலை சமாளிக்க முடியல.. திருட சென்ற இடத்தில் ஏசியில் தூங்கிய திருடன்.!

உத்தரப்பிரதேச மாநிலம் : லக்னோ இந்திரா நகரைச் சேர்ந்த டாக்டர் சுனில் பாண்டே என்பவருக்குச் சொந்தமான வீட்டில் யாரும் இல்லாத நிலையில், நபர் ஒருவர் திருடுவதற்காக வீட்டிற்குள் சென்று வெப்பம் தாங்காமால் அங்கு இருந்த ரூமில் ஏசியை போட்டுகொண்டு சுகமாக தூங்கினார். வீடு திறந்து கிடைத்ததை கவனித்த அக்கம் பக்கத்தினர்  உடனடியாக காவல்துறையினருக்கு தகவலை கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டிற்குள் சென்று அசந்து தூங்கி கொண்டு இருந்த அந்த திருடனை புகைப்படம் எடுத்தார். […]

#Police 2 Min Read
Default Image

பாலியல் தொல்லை அளித்த மருத்துவர்.. காரில் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்த போலீசார்.!

சென்னை:பாலியல் தொல்லை அளித்த மருத்துவரை கைது செய்ய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வரை காரிலேயே சென்ற போலீசாரால் பரபரப்பு. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் சதீஷ்குமார் என்பவரை கைது செய்ய, உணர்ச்சிவசப்பட்ட காவல்துறையினர் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் தங்களது போலீஸ் வாகனத்தை ( xuv ) ஓட்டிச் சென்றதால் பரபரப்பானது. The cops drove their car inside AIIMS Rishikesh.pic.twitter.com/rZDkCvHipM […]

#Police 5 Min Read
Police drive car - emergency ward

புதுச்சேரியில் கடல் சீற்றம் – சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் எச்சரிக்கை.!

சென்னை: புதுச்சேரியில் லேசான மழை, கடல் சீற்றம் காரணமாக கடலில் இறங்க சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  புதுச்சேரியில் ஏப்ரல் மாதத்தில் இருந்து […]

#Police 3 Min Read
Sea rage in Puducherry