நாடு முழுவதும் உள்ள 11 மாநிலங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 868 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் பல இடங்களில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. குஜராத், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது. மேலும், பீகார், அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயாவில் உள்ள சில பகுதிகளில் ஜூலை மாதத்தில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதனையடுத்து கர்நாடகா மும்பை, கொங்கன் மற்றும் ராஜஸ்தானில் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் சூழல் ஏற்பட்டது. மேலும் பரவலாக பெய்து வரும் மழையால் போக்குவரத்து வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டமும் அதிகரித்தும் வருகிறது. மேலும் கேரளாவில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 58 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் 11 மாநிலங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 868 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்தாண்டை விட இந்தாண்டு வழக்கத்துக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. கடந்தாண்டு மழைப்பொழிவால் உண்டான வெள்ளத்தில் சுமார் 908பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆகஸ்ட் 19 அன்று உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் வருகின்ற தினங்களில் அதிக மழை பெய்ய கூடும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானியான ஆர்கே ஜெனமணி தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…