Categories: இந்தியா

ஜார்கண்ட் முதலமைச்சராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்.!

Published by
மணிகண்டன்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில முதலமைச்சாக ஹேமந்த் சோரன் மாநில ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றார்.

நிலமோடி சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜனவரியில் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டார் ஹேமந்த் சோரன். அதற்கு முன்னதாக ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருந்தார் சோரன். அவருக்கு பதிலாக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் JMM மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பில் இருந்தார்.

கடந்த வாரம் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட வழக்கில் போதிய ஆதாரமில்லை என்று கூறி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி இருந்தது ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றம். இதனை அடுத்து, சம்பாய் சோரன் நேற்று ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

பின்னர், இன்று மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரி கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஹேமந்த் சோரன் ஆளுநரை சந்தித்தார்.  இதனை தொடர்ந்து ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அறிவித்தது போல, தற்போது ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஹேமந்த் சோரனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 3வது முறையாக ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்றுக்கொண்டார்.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

1 hour ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

3 hours ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

3 hours ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

4 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

4 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

5 hours ago