[Image Source: twitter/@ani]
இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மேகம் வெடிப்பு காரணமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால், அங்குள்ள சோலன் மாவட்டம் ஜாடோன் கிராமத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இமாச்சலப்பிரதேசம் சோலனில் உள்ள கண்டகாட் துணைப்பிரிவின் ஜடோன் கிராமத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3 பேர் காணவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், 5 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.
இதில், வெள்ளப்பெருக்கில் 2 வீடுகள் மற்றும் ஒரு மாட்டு தொழுவமும் அடித்து செல்லப்பட்டது. முன்னதாக, இடைவிடாத மழைக்கு மத்தியில் அம்மாநிலத்தில் சுமார் 200 சாலைகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேக வெடிப்பு காரணமாக 7 பேர் உயிரிழந்ததற்கு அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார். மேலும், கனமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…