Mallikarjun Kharge [Image source : PTI]
இந்து அமைப்புக்கு தடை விதிப்பதாக கூறிய கார்கே மீது ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு இந்து அமைப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் பொது காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் பஜிராங்கி தளம் (Bajrang Dal) எனும் அமைப்பை தடை செய்வோம் என பேசி இருந்தார். அந்த அமைப்பு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பஜிராங்கி தளமானது இந்து அமைப்பாகும்.
கார்கேவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்து சுரக்ஷா பரிஷத் நிறுவனர் ஹிதேஷ் பரத்வாஜ் கார்கே மீது பஞ்சாப் மாநிலத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், கார்கே மீது 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும் வழக்கில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி முன் வந்த போது, ஜூலை 10ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…