Mallikarjun Kharge [Image source : PTI]
இந்து அமைப்புக்கு தடை விதிப்பதாக கூறிய கார்கே மீது ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு இந்து அமைப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் பொது காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் பஜிராங்கி தளம் (Bajrang Dal) எனும் அமைப்பை தடை செய்வோம் என பேசி இருந்தார். அந்த அமைப்பு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பஜிராங்கி தளமானது இந்து அமைப்பாகும்.
கார்கேவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்து சுரக்ஷா பரிஷத் நிறுவனர் ஹிதேஷ் பரத்வாஜ் கார்கே மீது பஞ்சாப் மாநிலத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், கார்கே மீது 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும் வழக்கில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி முன் வந்த போது, ஜூலை 10ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…