bus collides with truck [Image Source : Twitter/@news18dotcom]
மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து மீது லாரி ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள சிந்த்கேதராஜா அருகே அரசு போக்குவரத்துக் கழக பேருந்தும், வேகமாக வந்த கண்டெய்னர் லாரியும் மோதிக் கொண்டதில் இரு வாகனங்களின் ஓட்டுநர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் காயமடைந்துள்ளனர்.
மும்பை-நாக்பூர் இடையே உள்ள நெடுஞ்சாலையில் புனேயில் இருந்து மகேகருக்குச் செல்லும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. பின் எதிரே அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்பு மற்றும் அவசரகால மருத்துவக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக சிந்தகேதராஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும், உயிரிழந்த பேருந்து ஓட்டுநர் ஷேக் குலால், அரசு போக்குவரத்து கழக ஊழியர் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டெய்னர் லாரி அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…