சிறப்பு ரயிலில் எத்தனை பேர் பயணிக்கலாம்.? புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இதோ.!

Published by
பாலா கலியமூர்த்தி

சிறப்பு ரயிலில் பயணம் செய்பவர்களுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால், தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, நேற்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதி நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் வெளிமாநில சேர்ந்தவர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைப்பதற்காக ரயில்வே நிர்வாகம் கடந்த 1ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கி வருகிறது. இதுதொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • ஒரு ரயிலில் சுமார் 1,200 பயணிகள் வரை பயணிக்கலாம் என்றும் 90% க்கும் குறையாத அளவுக்கு பயணிகளை ஏற்றி அனுப்பப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
  • சிறப்பு ரயில்கள் 500 கி.மீட்டருக்கும் அதிகமாக தூரத்துக்கு இயக்கப்படுவதால், இடையில் எந்த இடத்திலும் நிற்காமல் செல்லும்.
  • இதற்கான டிக்கெட்டுகளை ரயில்வே அச்சிட்டு மாநில அரசிடம் வழங்கும். அந்த டிக்கெட்டுகளை பயணம் செய்பவர்களிடம் மாநில அரசு கொடுத்து டிக்கெட் கட்டணத்தை வசூலித்து ரெயில்வேயிடம் வழங்க வேண்டும்.
  • பரிசோதனைக்கு செய்யப்பட்ட பின், பயணம் செய்வதற்கான டிக்கெட் வைத்திருப்பவர்களை மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.
  • பயணிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவற்றை அவர்களை அனுப்பி வைக்கும் மாநில அரசுகளே வழங்கவேண்டும்.
  • முக கவசம் அணிவதும், ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ய கேட்டுக்கொள்ள வேண்டும்.
  • பயண நேரம் 12 மணி நேரத்துக்கும் மேல் நீட்டித்தால் ரெயில்வே சார்பில் பயணிகளுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படும்.
  • பயணிகள் குறிப்பிட்ட இடத்தை சென்று அடைந்ததும் அந்தந்த மாநில அரசு அதிகாரிகள் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். பின்னர் அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களை அனுப்பிவைக்க வேண்டும்.
  • இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படும்.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

3 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

3 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

4 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

5 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

5 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

5 hours ago