மனைவி இறந்த சோகம் தாங்கமுடியாமல் வளர்த்த நாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர்!

Published by
Sulai
  • கேரளாவில் மனைவி இறந்த சோகம்தாங்கமுடியாமல் தன் உயிரை மாய்த்து கொண்ட கணவர்.
  • இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் குன்னப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரண் ஆவார்.இவர் தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரது சடலம் இருந்த இடத்தில் அருகில் இருந்த படுக்கை அறையில் இவரது மனைவியின் சடலம் இருந்துள்ளது.பின்னர் வீட்டின் பின்புறம் நாய் ஒன்று தலையில் அடித்து இறந்த நிலையில் இருந்துள்ளது.

மனைவியின் சடலத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ,அவர் உடல்நலக்கோளாறினால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.பின்னர் ஸ்ரீதரின் ஆடையில் இருந்து கடிதம் ஒன்று காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.

அதில் தமது மனைவி மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் இனி தமக்கு யாரும் இல்லாத காரணத்தால் தான் வளர்த்த நாயை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரின் ஆதார அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தீவைத்து கொளுத்திய நிலையில் காணப்பட்டுள்ளன.இந்நிலையில் இந்த சம்பவம் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…

21 minutes ago

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…

49 minutes ago

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

3 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

3 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

4 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

5 hours ago