கணவர் என்னுடன் சண்டையிடுவதே இல்லை- விவாகரத்து கேட்டு விண்ணப்பம் செய்த பெண்!

Published by
Rebekal

கணவரின் அதிக அன்பால் விவாகரத்து கேட்டு நீதிபதிகளை குழப்பத்துக்குள்ளாகியுள்ள பெண்ணின் செயல் உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பால் எனும் மாவட்டத்தில் பெண் ஒருவர் தனக்கு விவாகரத்து வேண்டும் என ஷரியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் பெண்ணின் விவாகரத்துக்கான காரணம் என்ன என்று அறிந்த நீதிபதிகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். அதாவது அந்தப் பெண்ணின் கணவர் அவளை அதிகமாக நேசிப்பதாலும், அவளுடன் சண்டை இட்டுக் கொள்வதில்லை எனும் காரணத்திற்காகவும் அந்தப் பெண் திருமணமான 18 மாதங்களிலேயே விவாகரத்துக்காக நீதிமன்றத்தை அணுகி உள்ள செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.

மீண்டும் அவரிடம் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா?  கணவரை கொச்சைப் படுத்த விரும்பாமல் மறைக்கிறீர்களா? என கேட்டபோது இல்லை, திருமணமாகி இத்தனை காலத்தில் அவர் என்னுடன் சண்டை போடுவதே இல்லை. நான் தப்பு செய்தாலும் உடனே மன்னித்து விடுகிறார். அது மட்டுமல்லாமல் சில சமயங்களில் வீட்டு வேலைகளை கூட அவரே செய்கிறார். இப்படி வாழக்கூடிய வாழ்க்கையில் எனக்கு விருப்பமில்லை, எனக்கு இந்த வாழ்க்கை தேவையில்லை என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து குழப்பமடைந்த நீதிபதிகள் அந்த பெண்ணின் கணவரிடம் கேட்டபோது அவர் வழக்கை திருப்பித் தருமாறும், தான் தனது மனைவியை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். நீதிபதிகள் இந்த விவகாரத்தில் நீதி செய்ய முடியாமல் அவர்களிடம் பரஸ்பரமாக இதை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு உள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

11 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

11 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

12 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

12 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

13 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

14 hours ago