தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்திலுள்ள கர்ப்பிணி பெண் ஒருவரை அவரது கணவர் கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை வற்புறுத்து குடிக்கச் சொல்லியதால் அப்பெண் கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் மாவட்டம் ராஜ்பேட் பகுதியில் வசித்து வரக்கூடிய தருண் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பதாக கல்யாணி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கல்யாணி கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து தருண் கல்யாணி அழகாக இல்லை என்று கூறி அவரை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், உங்கள் வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சினை வாங்கி வா என அடிக்கடி அவளை அடித்ததாகவும், இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தருண் கல்யாணியை கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
அதனை குடித்த கல்யாணி சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்உடல்நிலை , சிகிச்சை பலனின்றி அவர் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். பின் கல்யாணியின் உறவினர்கள் தருண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் தருண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இந்திய தண்டனை சட்டம் 302, 304b மற்றும் 498 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதுடன், தலைமறைவாக உள்ள தருணை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…