உலகின் சிறந்த மொபைல் போன் நிறுவனமான ஆப்பிள் ஐபோன் நிறுவனம், அதின் மொத்த உற்பத்தியான ஐந்து பங்கில் ஒரு பங்கு உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு பிறகு சீனாவில் உள்ள அனைத்து பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தை பிற நாடுகளுக்கு இடம்பெயர திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவில் பெரிய அளவில் ஐபோன் உற்பத்தி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் அவற்றை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவில் உள்ள நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையில் ஐபோன்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், சீனாவில் இருந்து பெரிய அளவில் உற்பத்தியை இடம் மாற்ற முடிவு செய்துள்ளது. இது குறித்து தொடர்ந்து பல பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இதேபோல், ஏற்கெனவே இந்தியாவில் உற்பத்தி செய்வது தொடர்பாக பாக்ஸ்கான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள ஆப்பிள் நிறுவனம், அதே நிறுவனங்களுடன் கூடுதல் உற்பத்திக்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 5 ஆண்டுகளில் சுமார் 4,000 கோடி டாலர் அதாவது சுமார் ₹3,04,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…