எல்.டி.எஃப் முன்பைவிட அதிக இடங்களைப் பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என பிறவி விஜயன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 6ம் தேதி கேரளாவில் உள்ள 140 இடங்களில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், 2.74 கோடி வாக்காளர்களில் 73.58 சதவீதம் பேர் வாக்களித்தனர். முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான தற்போதய இடது முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் பாஜக என மும்முணைப் போட்டி நிலவுகிறது.
இதனிடையே, நேற்று கேரள சட்டமன்ற தேர்தலுக்கான பிந்தைய கருத்துக்கணிப்பை ரிபப்ளிக் டிவி மற்றும் சிஎன்எக்ஸ் நடத்தி வெளியிட்டிருந்தது. அதில், பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. சிபிஎம் கூட்டணி 72-80, காங்கிரஸ் கூட்டணி 58-64, பாஜக கூட்டணி 1-5 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், எல்.டி.எஃப் முன்பைவிட அதிக இடங்களைப் பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் நான் இன்னும் என் வார்த்தைக்கு துணை நிற்கிறேன் எனவும் கூறியுள்ளார். எனவே, தேர்தல் முடிவுகள் அறிவிக்க இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே உள்ளன. ஆகையால், ஞாயிற்றுக்கிழமை வரை காத்திருப்போம் என்றார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…