இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டேன் – நடிகை ரோஜா

Default Image

இனி சினிமாவிலும், டெலிவிஷனிலும் நடிக்க மாட்டேன் என ரோஜா பேட்டி. 

ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.அப்போது,இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,அண்மையில் அமைச்சர்கள் சிலர் ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடிகை ரோஜா உட்பட  25 அமைச்சர்கள் பதவியேற்றனர். மாநில தலைநகர் அமராவதியில் உள்ள மாநில செயலகம் அருகே நடைபெற்ற பொது நிகழ்ச்சியில், கவர்னர் பிஸ்வ பூசன் ஹரிசந்தன், 25 அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

நேற்று புதிய மந்திரி சபை பதவியேற்று கொண்ட நிலையில், பிரபல நடிகையும், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜாவுக்கு, சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் மற்றும் கலை விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நடிகை ரோஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், ஜெகன்மோகன் ரெட்டி எனக்கு கொடுத்த இந்த வாய்ப்பை வாழ்நாளில் என்றும் மறக்க மாட்டேன். மந்திரி ஆகி விட்டதால் இனி சினிமாவிலும், டெலிவிஷனிலும் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai