படுக்கையை பகிர்ந்தால் தான் ஆக்சிஜன் தருவேன் – இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

Published by
Rebekal

தன்னுடன் படுக்கையை பகிர்ந்தால் தான் ஆக்சிஜன் தருவேன் என அண்டை வீட்டுக்காரர் தனது தோழியின் தங்கையிடம் கூறியதாக பெண்மணி ஒருவர் தனது ஆதங்கத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதிலும் தீவிரமாக பரவி வரும் நிலையில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் பலர் தற்போது கொரோனாவால் உயிரிழப்பதை விட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நாளுக்கு நாள் உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர். எனவே ஆக்சிஜன் தேவை நாடு முழுவதும் அதிகரித்திருப்பதால் ஆக்ஸிஜன் வைத்திருப்பவர்கள் ஆக்சிஜன் தேவைக்காக தங்களை நாடுபவர்களிடம் பல்வேறு முறைகளில் கொள்ளையடிக்கின்றனர். ஒருபுறம் பணத்தால் கொள்ளையடிப்பது இருக்க மறுபுறம் மானபங்கம் படுத்தக்கூடிய நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் கூட ஒரு இளம்பெண்மணிக்கு நடந்த கொடுமை குறித்து ஒரு பெண்மணி ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனது இளைய சகோதரி போன்ற வயதுடைய ஒரு பெண்மணி அவரது தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவருக்கு ஆக்சிஜன் தேவை ஏற்பட்டுள்ளது. எனவே அவர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கக்கூடிய அண்டை வீட்டு நபரிடம் சென்று ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும் என கேட்டுள்ளார்.

ஆனால் அந்த நபர் அதற்காக தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால் தான் ஆக்சிஜன் தருவேன் என கூறியுள்ளார். இப்பொழுது அந்தப் பெண்மணி என்ன செய்வார்? தந்தையை காப்பாற்றுவதற்காக அவருக்கு இணங்கி விடுவதா, அல்லது தனது மானம் தான் முக்கியம் என நினைப்பாரா? எப்படி இந்த மனிதர்களால் இது போன்ற இப்படி நடந்து கொள்ள முடிகிறது என தனது ஆதங்கத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி குறிப்பு தற்போது பல்வேறு தரப்பட்ட நபர்களிடமிருந்து விமர்சனங்களை எழுப்பி வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

24 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago