இனி பசுவை கொன்றால் 10 ஆண்டுகள் சிறை.. 5 லட்சம் அபராதம்- முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி!

Published by
Surya

உத்தர பிரதேச மாநிலத்தில் பசுக்கொலையில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று அம்மாநிலத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பசு வதை தடுப்பு அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த அவசர சட்டம் தற்போது உள்ள தடுப்பு சட்டம் அதாவது, உத்தர பிரதேச பசு வதை தடுப்பு சட்டம், 1955-ஐ விட மிகவும் வலுவானதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுவதையும் அம்மாநில அரசு தெரிவித்தது.

மேலும், பசு வதை தொடர்பான சம்பவங்கள் முற்றிலுமாக நிறுத்துவதையும் நோக்கமாக இந்த சட்டம் கொண்டுள்ளது என அம்மாநில அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, முதல் முறையாக பசு கொலையில் ஈடுபடுபவருக்கு 1 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், இரண்டாவது முறை செய்தால் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தது.

அதேபோலவே, பசுக்களை சட்டவிரோதமாக வாகனத்தில் கொண்டு சென்றால் புதிய சட்டத்தின்கீழ், வாகன ஓட்டுநர், உடனிருந்தனர் மற்றும் வாகன உரிமையாளர் ஆகியவரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவித்த அரசு, பசுவிற்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நபர் ஒரு ஆண்டு கடுமையான சிறைத்தண்டனை வழங்கப்படலாம். அதுமட்டுமின்றி, அந்த சிறை தண்டனையை, 7 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம் எனவும் தெரிவித்தது.

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

2 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

3 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

3 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

5 hours ago