Mukesh Ambani
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மின்னஞ்சலில், “நீங்கள் எங்களுக்கு ரூ.20 கோடி தராவிட்டால், உங்களை (முகேஷ் அம்பானி) கொன்று விடுவோம். இந்தியாவிலேயே மிகச் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் எங்களிடம் உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் வருவது இது முதல் முறையல்ல.
கடந்த ஆண்டு, முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலைமிரட்டல் அழைப்பு விடுத்ததற்காக பீகாரின் தர்பங்காவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் அந்த அழைப்பில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரையும், மும்பையில் உள்ள ஹெச்என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையையும் வெடிவைத்து தகர்க்கப்போவதாக மிரட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…