ManipurGovtEmp [Image-TH]
அரசு அலுவலகத்திற்குச் செல்லாத ஊழியர்களுக்கு, வேலை செய்யாவிடில் ஊதியம் இல்லை என்ற விதியை செயல்படுத்த மணிப்பூர் அரசு முடிவு.
மணிப்பூரில் கலவரத்திற்கு மத்தியில் அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் உரிய விடுமுறை ஏதும் அறிவிக்காமல் இருப்பதாய் அடுத்து, ‘வேலை இல்லை, ஊதியம் இல்லை’ என்ற உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என மணிப்பூர் அரசு கூறியுள்ளது. மணிப்பூரில் கடந்த மே மாதம் 3 அன்று கலவரம் வெடித்ததை அடுத்து, கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டோர் இந்த வன்முறையில் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூரில் மெய்டேய் சமூகத்திற்கு பட்டியல் இன அந்தஸ்து வழங்கப்பட்டதை எதிர்த்து மெய்டேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே கலவரம் வெடித்து பெரும் மோதலைத் தூண்டியது. இந்த நிலையில் அரசு அலுவலகங்களுக்கு பணிக்கு செல்லாமல் அறிவிக்கப்படாத விடுமுறையில் இருக்கும் ஊழியர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுளள்து.
அதாவது வேலை செய்யாவிடில் ஊதியம் இல்லை எனும் உத்தரவை பிறப்பிக்கவுள்ளதாக மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது. மேலும் மணிப்பூரில் தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக பணிக்கு வர முடியாத ஊழியர்களின் விவரங்களை ஜூன் 28 ஆம் தேதிக்குள் அளிக்குமாறு, நிர்வாகச் செயலாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…