அசாம் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி அசாம் மக்கள் தொகை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் கொள்கை மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் படி 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கும் பெற்றோர்கள் அரசு வேலை வேலை கிடையாது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இந்த விதிமுறை வருகின்ற 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. மக்கள்தொகை சரிபார்க்கும் நோக்கில் இந்த கொள்கை கொண்டுவர உள்ளதாக நேற்று முன்தினம் மாலை அசாம் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் அரசு பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.அதே போல் தற்போது அரசு பணியில் இருக்கும் அதிகாரிகளும் இந்த விதியைப் பின்பற்ற வேண்டும் என மாநில அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து அம்மாநில அமைச்சர் ஒருவர் கூறுகையில் , “நிலத்தில் இருக்கும் நெருக்கடியை குறைக்கவே இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது நிலம் இல்லாத குடும்பங்களுக்கு நிலம் அளிக்க திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…