Categories: இந்தியா

பெண்களே….இலவசமாக தையல் மிஷின் வேண்டுமா? அப்போ இத பற்றி தெரிஞ்சிக்கோங்க.!

Published by
கெளதம்

Sewing Machine: பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ், மத்திய அரசு பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்குகிறது. இது தொடர்பான செய்திகள் மக்கள் மத்தியில் கடந்த சில நாட்களாலாக பேசப்பட்டு வருகிறது.

அட ஆமாங்க…இந்த இலவச தையல் மிஷின் திட்டத்தை விஸ்வகர்மா யோஜனா என்றும், PM Muft Silai Machine Yojana அல்லது Pradhan Mantri Free Silai Machine Yojana என்றும் அழைக்கப்படுகிறது.

தையல் மிஷின் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.15000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் நீங்கள் தையில் மிஷின் வாங்க முடியும்.

இந்த இலவச தையல் மிஷின் திட்டத்திற்கு விண்ணப்பிக்க https://pmvishwakarma.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். இலவச தையல் மிஷின் திட்டத்திற்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் பின்வரும் விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

  1. ஆதார் அட்டை
  2. வருமான சான்றிதழ்
  3. ஜாதி சான்றிதழ்
  4. வறுமை கோடு குடும்ப அட்டை
  5. வங்கி பாஸ்புக்
  6. பாஸ்போர்ட் அளவு கொண்ட புகைப்படம்

தகுதி

  • 20 முதல் 40 வயதுடைய பெண்களாக வேண்டும்.
  • பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாக இருக்க வேண்டும்.
  • இந்தியாவின் ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு வேண்டும்.
  • தையல் பற்றிய அடிப்படை அறிவு வேண்டும்.
  • இது போன்ற இலவச திட்டத்தை வேறு எந்த அரசு திட்டத்திலிருந்தும் பெற்றிருக்க கூடாது.

இலவச தையல் மிஷின் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, உங்கள் விண்ணப்பப் படிவத்துடன் மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  1. இலவச தையல் மிஷின் திட்டம் 2024க்கான விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்யவும்.
  2. தேவையான விவரங்களை பூர்த்தி செய்துவிட்டு தேவையான ஆவணங்களை சேர்க்கவும்.
  3. விண்ணப்பத்தை ஆன்லைனில் அல்லது அருகிலுள்ள அரசு அலுவலகம்/என்ஜிஓவில் சமர்ப்பிக்கவும்.

ஆஃப்லைன் முறை:

  1. அருகிலுள்ள பொது சேவை மையம் அல்லது கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று இது பற்றி அறிந்து கொள்ளலாம்.
  2. அங்கு தகவல் அறிந்து கொண்டு விண்ணப்பப் படிவத்தைப் பெற்று நிரப்பவும்.
  3. தேவையான ஆவணங்களின் செராக்ஸ்களை சேர்த்து கொடுக்கவும்.
  4. விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட்டு அவர்கள் கொடுக்கும் உறுதிப்படுத்தல் ரசீதைப் பெற்று கொள்ளவும்.

ஆன்லைன் விண்ணப்பங்களை விண்ணப்பித்த பின், உங்கள் விண்ணப்பம் சரி செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டீர்கள் என்றால், அதற்கான SMS உங்கள் மொபைல் போனுக்கு வந்து சேரும். அதன்பின், ஒப்புதல் கிடைத்த 15 நாட்களுக்குள் வங்கி கணக்கில் உதவித்தொகை வரவு வைக்கப்படும். இதன் மூலம் நீங்கள் தையில் மிஷினை வாங்க முடியும்.

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

2 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

3 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

4 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

5 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

6 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

7 hours ago