Categories: இந்தியா

பட்ஜெட்டில் இது நடந்தால் தங்கம், வைரம் விலை குறையும்..!

Published by
murugan

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  ஒவ்வொரு ஆண்டும் போலவே  2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்கிறார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெறும். இது தற்போதைய அரசின் கடைசி பட்ஜெட் ஆகும்.

இன்னும் சில நாட்களில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது. இந்நிலையில், தங்கம் மற்றும் வைரம் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உள்ளது. அதை 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வைரங்கள் மீதான இறக்குமதி வரியை 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கும் திட்டத்தை வரும் மத்திய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஜிஜேஇபிசி தலைவர் விபுல் ஷா கூறினார். வெட்டப்பட்ட மற்றும் பளபளப்பான கற்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிக்கப்பட்டால் ஏற்றுமதி குறையும் என்று கூறப்படுகிறது.இதனால் நகை தொழிலில் வேலை வாய்ப்பு குறையும் என கவலை தெரிவித்தார்.

GJEPC தலைவர் விபுல் ஷா கூறுகையில், தங்களது கோரிக்கையை நிறைவேற்றினால், துபாய், பெல்ஜியம் போன்று இந்தியாவும் வர்த்தக மையமாக மாறும் என்றார். மேலும் நமது வைர வியாபாரிகள் வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார். மத்திய பட்ஜெட்டில்  ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால்  தங்கம், வைரம் விலை பெருமளவு குறையும் எனத் தெரிகிறது.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago