கர்நாடகா:தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தந்தை…மகனுக்கு நேர்ந்த கொடூரம்..!

Published by
Edison

கர்நாடகாவில்,சம்பளம் கேட்டு தகராறு செய்த தொழிலாளர்களை நோக்கி தந்தை துப்பாக்கியால் சுட்டதில் குறி தவறி மகன் மீது குண்டு பாய்ந்தது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் பாண்டேஸ்வர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மோர்கன்ஸ்கேட் பகுதியை சேர்ந்த ராஜேஸ் பிரபு என்பவர் பார்சல் மற்றும் டிரான்ஸ்போர்ட் அலுவலகம் நடத்தி வருகிறார்.இவர்,கடந்த சில மாதங்களாக ராஜேஸ் தன்னிடம் வேலை செய்து வரும் டிரைவர்கள், கிளீனர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து,நேற்று மாலை அங்கு வந்த ஒரு டிரைவரும், கிளீனரும் அலுவலகத்தில் இருந்த ராஜேஷின் மனைவி சாந்தலாவிடம் இருந்து கூலியாக ரூ .4,000 கேட்டதாகவும், அவர்கள் பணத்திற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, ​​சாந்தலா அருகில் உள்ள வீட்டில் இருந்த கணவர் மற்றும் மகனை அழைத்தார்.

அப்போது,ராஜேஷ்  0.32-துளை கொண்ட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் அலுவலகத்திற்கு விரைந்தார்.இதற்கிடையில், வாக்குவாதத்தின் போது, ராஜேஷ் பிரபுவின் மகன் சுதீந்திரா என்ற 16 வயது சிறுவன்,டிரைவர் மற்றும் கிளீனரை அறைந்ததால்,அவர்கள் இருவரும் சுதீந்திராவைத் தாக்கியுள்ளனர்.

இதனால் கோபமுற்ற ராஜேஷ்,தனது கைத்துப்பாக்கியால் அவர்களை நோக்கிச் சுட்டபோது,தோட்டா குறித் தவறி அவரது மகனான சுதீந்திராவின் தலையைத் துளைத்தது.இதில்,இடது கண் மற்றும் தலைக்கு அருகில் பலத்த காயமடைந்த சுதீந்திரா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மங்களூர் தெற்கு காவல் நிலையத்தில் ராஜேஷ் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சஷிகுமார் கூறினார்.

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

5 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

24 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

47 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago