PMModi [Image Source : Twitter/@BJP4India]
கடந்த 9 ஆண்டுகளில் நவீன கட்டமைப்புக்காக ரூ.34 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். அதில் ஜி-20 நாணயம் மற்றும் ஜி-20 முத்திரையையும் அவர் வெளியிட்டார். பிறகு உரையாற்றிய பிரதமர், தேசத்தின் புதிய உற்சாகத்தையும் மனநிலையையும் குறிக்கும் வகையில் கவிதை மூலம் தனது உரையைத் தொடங்கினார்.
இதனையடுத்து, கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் நவீன உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக கிட்டத்தட்ட சுமார் ரூ.34 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் மூலதனச் செலவினங்களுக்காக ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும், இந்தியா முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் செயல்பட்டு வருகிறது. அதற்கு முந்தைய ஏழு தசாப்தங்களில் வெறும் 20 ஆயிரம் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்ட நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் 40 ஆயிரம் கிமீ ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டன. இன்று மாதந்தோறும் 6 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…