கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி உலக மக்களை அச்சத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அதிக பங்குகளை வகித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பல நாடுகளில் வழக்கத்தைவிட பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர விற்பனையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி இந்த வருடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வு காரணமாக பல்வேறு தொழிற்சாலைகள் பல கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது. இதனால், விற்பனையாளர்கள் வெளிநாடுகளிலிருந்து மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்து வருகின்றனர்.
கடந்த மூன்று மாதங்களில் ஸ்மார்ட்போன்கள் இறக்குமதி அதிகமாக உள்ளது. மேலும், தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிக்கும் எனவும் கடந்த ஆண்டு இந்தியாவில் மொத்தம் 5.4 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளது. ஆனால் இந்த வருடம் 13 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கக்கூடாது என்பதற்காக தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால், மொபைல் போன்களின் தேவை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…