அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17% லிருந்து 28% ஆக உயர்வு..!

Published by
murugan

குஜராத் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17% லிருந்து 28% ஆக உயர்த்தியுள்ளது.

குஜராத் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 11 சதவிகிதம் உயர்த்த குஜராத் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உயர்வு அடிப்படையில் 17 சதவீதமாக அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்ந்துள்ளது.

குஜராத் அரசாங்கத்தால் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மத்திய அரசு அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கியதற்கு இணையாக உள்ளது. இந்த மத்திய அரசு ஜூலை மாதத்தில், ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தியது.

நாங்கள் வழக்கமாக மத்திய அரசின் அகவிலைப்படியை பின்பற்றி, அதற்கேற்ப திருத்தங்களைச் செய்வதால், அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது என குஜராத் அரசு தெரிவித்தது. இந்த நடவடிக்கை மாநில அரசின் கீழ் பணிபுரியும் 9.61 லட்ச ஊழியர்களும், 7-வது ஊதியக்குழுவின் கீழ் உள்ள 4.5 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும் என்று சட்டசபையில் இன்று முதல்வர் அறிவித்தார். தமிழகத்தில் கொரோனா காரணமாக அரசு ஊழியர்கள், ஆசிரியருக்கான அகவிலைப்படி உயர்வு கடந்த 2020 ஏப்ரலில் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

10 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

11 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

12 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

12 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

14 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

15 hours ago