ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதித்ததால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐ.சி.எம்.ஆர் புதிய இடத்தை எட்டியுள்ளது.
ஐ.சி.எம்.ஆர் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஐ.சி.எம்.ஆர் அதன் சோதனை திறனை அதிகமாகியுள்ளது. இப்போது ஒவ்வொரு நாளும் 3 லட்சம் மாதிரிகள் சோதிக்கப்படலாம். மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு மே 27 அன்று 1,16,041 மாதிரிகளை பரிசோதித்ததால், ஐ.சி.எம்.ஆர் அதன் சோதனை திறனை 28 நாட்களில் ஒரு லட்சம் மாதிரிகளிலிருந்து இரண்டு லட்சமாக உயர்த்தியது என்று கூறியுள்ளார்.
ஜூன் 23 வரை மொத்தம் 73,52,911 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் 2,15,195 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 1,000 கொரோனா சோதனை மையங்களில் 730 ஐசிஎம்ஆர் நெட்வொர்க்கில் உள்ளது. மேலும் 270 தனியார் துறையில் உள்ளது, 557 ஆர்டி-பிசிஆர் ஆய்வகங்கள் மற்றும் 363 ட்ரூநாட் ஆய்வகங்கள் மற்றும் 80 சிபிஎன்ஏடி ஆய்வகங்கள் உள்ளன.
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…