மும்பையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், அங்கு 144 தடை உத்தரவை அம்மாவட்ட காவல்துறை ஆணையர் பிறப்பித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு இதுவரை 1,74,761 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் அதிகபட்சமாக, மும்பையில் ஒரே நாளில் 903 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அங்கு ஜூலை 15-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை அம்மாவட்ட காவல்துறை ஆணையர் பிரணாயா அசோக் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், பொது இடங்களில் ஒருவருக்கு மேல் கூடக்கூடாது போன்ற தடைகளை விதித்துள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…