கொரோனாவின் பாதிப்பு கோவாவில் அதிகரித்து வரும் நிலையில், மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது வீரியத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் தினமும் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். அதுபோல கோவாவிலும் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து கோவா மாநிலத்தில் ஏற்கனவே மே 9-ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தற்பொழுதும் இந்த ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள், மளிகைக் கடைகள், மதுபானக் கடை உள்ளிட்டவை காலை 7 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை திறந்திருக அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் மருத்தகங்கள் மற்றும் உணவகங்களில் காலை 7 முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் மே 23 உடன் முடிவடைய உள்ள ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் முதல்வர் பிரமோத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…