கொரோனாவின் பாதிப்பு கோவாவில் அதிகரித்து வரும் நிலையில், மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது வீரியத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் தினமும் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். அதுபோல கோவாவிலும் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து கோவா மாநிலத்தில் ஏற்கனவே மே 9-ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தற்பொழுதும் இந்த ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள், மளிகைக் கடைகள், மதுபானக் கடை உள்ளிட்டவை காலை 7 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை திறந்திருக அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் மருத்தகங்கள் மற்றும் உணவகங்களில் காலை 7 முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் மே 23 உடன் முடிவடைய உள்ள ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் முதல்வர் பிரமோத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…